சென்னை: திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்ட செல்வப்பெருந்தகைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏற்கெனவே பல வேட்பாளர்களுக்குக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், அவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலர் வீட்டில் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டனர். திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி ஸ்ரீபெரும்புதூர் தொகுதி வேட்பாளராக செல்வப்பெருந்தகை அறிவிக்கப்பட்டார். தொகுதி முழுவதும் பொதுமக்களை நேரில் சந்தித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தற்போது வாக்குப்பதிவு முடிந்த நிலையில் செல்வப்பெருந்தகைக்கு கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டது.