கொலை வழக்கில் 3 ஆண்டுக்குப்பின் சென்னை விமான நிலையத்தில் தலைமறைவு குற்றவாளி கைது

சென்னை: ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை சேர்ந்தவர் ராஜா (50), எலக்ட்ரிக்கல் ஊழியர். கடந்த 2018ம் ஆண்டு தொண்டியில் நடந்த கோஷ்டி மோதலில் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டார். அந்த வழக்கில் ராஜா முக்கிய குற்றவாளி. இதையடுத்து தொண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜாவை தேடி வந்தனர். ஆனால் அவர், வெளிநாட்டுக்கு தப்பி விட்டார். இதையடுத்து ராமநாதபுரம் எஸ்பி, தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக ராஜாவை அறிவித்தார். மேலும், அனைத்து சர்வதேச விமான நிலையங்களுக்கும் தகவல் கொடுத்தனர். இந்நிலையில் துபாயில் இருந்து பிளை துபாய் சிறப்பு விமானம் நேற்று அதிகாலை சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அதில் 3 ஆண்டுகளாக தேடப்படும் தலைமறைவு கொலை குற்றவாளி ராஜாவும் வந்தது தெரிந்தது. அவரை மடக்கி பிடித்து, ராமநாதபுரம் எஸ்பிக்கு தகவல் கொடுத்தனர். இதை தொடர்ந்து, ராஜாவை கைது செய்ய ராமநாதபுரம் மாவட்ட தனிப்படை போலீசார் சென்னைக்கு வருகின்றனர்.

Related Stories: