விருதுநகர்: தேர்வு பயத்தை போக்கும் வகையில் பிரதமர் மோடி மாணவர்களுடன் இணையவழியில் நடத்திய கலந்துரையாடல் (பரிக்ஷா பே சர்ச்சா) நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதற்கு விருதுநகர் மாவட்டத்தில் இருந்து 6 பள்ளிகள் தேர்வு செய்து அனுப்பப்பட்டன. இதில் 2 பள்ளிகள் தேர்வாகின. விருதுநகர் கல்வி மாவட்டம் வீரார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவி கனகலெட்சுமி, திருவில்லிபுத்தூர் கல்வி மாவட்டம் ராஜபாளையம் அம்மணியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி நவகீதாஞ்சலி ஆகியோர் பிரதமர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.