வே.ஆனைமுத்து மறைவுக்கு திருமாவளவன் இரங்கல்

சென்னை: வே.ஆனைமுத்து மறைவிற்கு விசிக தலைவர் திருமாவளவன் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டின் அளவு 50% ஆக உயர்த்தப்பட்டதில் பெரும் பங்கு வகித்தவர். சமூக நீதிக் கொள்கை பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ள சூழலில் அவரது மறைவு தமிழர்களுக்கு மிகப்பெரும் இழப்பு. அவருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம்.

பெரியார் நெறி பிறழாத அவரது வாழ்க்கை 96 வயதிலும் அவரை ஒரு இளைஞரைப் போல இயங்க வைத்தது. எவருக்கும் அஞ்சாமல் தனது கருத்துக்களைக்கூறும் துணிச்சல் பெற்றவர். சனாதன சக்திகள் தமிழ்நாட்டை மீண்டும் சூறையாட முனைந்துள்ள சூழலில் ஆனைமுத்து பணி அதிகம் தேவைப்படுகிற நேரத்தில் இயற்கை அவரைக் கவர்ந்துகொண்டுவிட்டது. அவருடைய இறப்பு தமிழ்ச் சமூகத்துக்குப் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் அவரது கட்சியினருக்கும் எமது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: