சென்னை: தெற்கு ரயில்வேயிலும், ரயில்வே ஊழியர்கள், பாதுகாப்புப்படை வீரர்கள் என அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டு வருகின்றனர். இதுவரை தெற்கு ரயில்வேயில் 70 சதவீத பாதுகாப்புப்படை வீரர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளதாக தெற்கு ரயில்வே பாதுகாப்புப்படை டி.ஐ.ஜி சந்தோஷ் சந்திரன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது: ரயில்வே பாதுகாப்புப் படையில் ஆரம்பத்தில் 50க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வந்தனர். தற்போது பலர் கொரோனாவில் இருந்து பூரண குணமடைந்து உள்ளனர். இன்றைய தேதியில் 13 பேர் மட்டுமே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.