சோளிங்கர் : சோளிங்கர் சட்டமன்ற தொகுதியில் ஆளுங்கூட்டணியின் அதிகார துஷ்பிரயோகம் கடும் கண்டனத்திற்குரியது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சோளிங்கர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நெமிலி பேரூராட்சி வாக்குச்சாவடி எண் 221 மற்றும் 223-ல் கள்ள ஓட்டு போட வந்த பா.ம.க.வினரை தட்டிக் கேட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வாக்குச்சாவடி முகவர்களான 10வது வார்டு கழக செயலாளர் திரு.குணசேகர், 8வது வார்டு கழக செயலாளர் திரு.நித்யா, மாவட்ட புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் இளைஞரணி இணைச்செயலாளர் திரு.தட்சிணாமூர்த்தி மற்றும் நெமிலி பேரூராட்சிக் கழக துணைச்செயலாளர் திரு.திருநாவுக்கரசு ஆகியோர் மீது காவல்துறையினர் கண்ணெதிரே கொலைவெறித் தாக்குதல் நடந்தியிருப்பதற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.