போடி : தேனி மாவட்டம் போடி நகரில் உள்ள அண்ணா நடுநிலை பள்ளியில் 9 பூத்கள் உள்ளன. இதில் 84வது பூத்தில் இயந்திர பழுதால் 2 மணி நேரம் ஓட்டுப்பதிவு தாமதமானது. இதுபற்றி அறிந்த திமுக முன்னாள் எம்எல்ஏ லட்சுமணன், அந்த பூத்திற்கு விசாரிக்க வந்தார். அப்போது பூத் ஏஜென்ட் என்ற பெயரில் பூத்திற்குள் ஓபிஎஸ் படத்துடன் கூடிய மஞ்சள் பைகளுடன் பலர் அமர்ந்திருந்தனர். இதைப் பார்த்து லட்சுமணன் அதிர்ச்சியடைந்தார். பூத்தை விட்டு வெளியேறுமாறு அவர்களிடம் கூறினார். அவர்கள் வெளியேற மறுத்து, அங்கேயே அமர்ந்திருந்தனர்.