தமிழகத்தில் 4வது நாளாக 3,672 பேருக்கு கொரோனா

சென்னை: சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நேற்று 80,056 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 3,672 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 23,777 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை தமிழகத்தில் 9,03,479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 1,842 பேர் குணமடைந்தனர். நேற்று 11 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: