ஊத்துக்கோட்டை: சென்னையில் இருந்து கொல்கத்தாவுக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது. சென்னை துறைமுகத்தில் இருந்து சரக்குகள் ஏற்றிச்செல்லும் கனரக லாரிகள் மற்றும் பல்வேறு வாகனங்கள் இந்த சாலையை அதிகளவு பயன்படுத்துகின்றன. சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி, கவரைப்பேட்டை மற்றும் திருப்பதிக்கும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகிறது. இதனால் இந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதையடுத்து சாலையை அகலப்படுத்தவேண்டும் என்று பல தரப்பினரும் கோரிக்கை வைத்தனர்.