சென்னை: சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகள் விடுமுறை விடப்பட்டதால் நேற்று முன்தினம் ஒரேநாளில் தமிழகத்தில் ரூ.160 கோடிக்கு மதுவிற்பனை நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் நாளை சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், தமிழகம் முழுவதும் நேற்று முதல் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது. 3 நாட்கள் தொடர் விடுமுறைக்கு பிறகு வரும் 7ம் தேதி தான் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும். இந்தநிலையில், நேற்று முன்தினம் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் குடிமகன்களின் கூட்டம் அலைமோதி காணப்பட்டது.