சென்னை: தேர்தல் ஆணையத்திடம், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள் மீது ஆதாரப்பூர்வமற்ற விமர்சனங்கள் கூடாது. கட்சி மற்றும் வேட்பாளரின் சொந்த வாழ்க்கை குறித்து விமர்சிக்க கூடாது. கட்சி மற்றும் கட்சிக்காக செயல்படுபவர்கள் மீது எந்தவித ஆதாரமுமில்லாமல், விமர்சனங்கள் இருக்க கூடாது, அதனை தவிர்க்க வேண்டும். என்று தேர்தல் நடத்தை விதிகளில் கூறப்பட்டுள்ளது.