அண்ணா சிலைக்கு தீ வைத்தவர்களை இரும்புக்கரத்தால் ஒடுக்க வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை: கள்ளக்குறிச்சி மாவட்டம் மாதவச்சேரியில் அண்ணாவின் சிலையை சனாதன பயங்கரவாதிகள் தீ வைத்து எரித்துள்ளனர். அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். பெரியார் சிலையையும், திருவள்ளுவர் சிலையையும், அண்ணா சிலையையும் சேதப்படுத்தும் போக்கு தமிழகத்தில் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது.

திராவிட இயக்கத்தையும் பெரியார், அண்ணா ஆகியோரையும் சனாதன சக்திகள் தொடர்ந்து இழிவுபடுத்தி பேசி வருகின்றனர்.தேர்தல் நேரத்தில் அமைதியை சீர்குலைக்கும் விதமாக, வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் சனாதன சக்திகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவதற்கு தேர்தல் ஆணையமும், காவல்துறையும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Stories: