சென்னை: சென்னை, மெரினா கடற்கரையில் வாக்குப்பதிவின் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக சென்னை வேலம்மாள் வித்யாலயா பள்ளி மாணவர்கள் வடிவமைத்த மணல் சிற்பத்தை சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ் நேற்று பார்வையிட்டார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்திலேயே குறைவான வாக்குப்பதிவு சதவீதம் உள்ள மாவட்டமாக சென்னை உள்ளது. ஏப்ரல் 6ம் தேதி ஊதியத்துடன் விடுப்பு அளிக்க வேண்டும் மீறும் நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். நடத்தை விதிகள் மீறல் தொடர்பாக 435 புகார்கள் வந்துள்ளன.