தமிழகத்தில் 11 புதிய மருத்துவ கல்லூரிகள் விதிகளுக்கு உட்பட்டு கட்டப்படுகின்றனவா?: ஐகோர்ட் கேள்வி

சென்னை: தமிழகத்தில் 11 புதிய மருத்துவ கல்லூரிகள் விதிகளுக்கு உட்பட்டு கட்டப்படுகின்றனவா என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தேசிய மருத்துவ ஆணையம் ஆய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதிய மருத்துவ கல்லூரிகள் மருத்துவ கவுன்சில் விதிப்படி கட்ட கோரி ராஜசேகரன் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். ராஜசேகரன் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தேசிய மருத்துவ ஆணையம் ஆய்வு செய்ய உத்தரவிட்டனர்.

Related Stories: