விருதுநகர்: சாத்தூர் அருகே நடந்த பட்டசு ஆலை வெடிவிபத்தில் படுகாயமுற்ற மேலும் ஒரு பெண் உயிரிழந்துள்ளார். மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த படந்தாலை சேர்ந்த முத்துராஜ் மனைவி வீரலட்சுமி(40) சிகிச்சைபலனின்றி உயிரிழந்தார். சாத்தூர் அருகே உள்ள அச்சங்குளத்தில் சந்தனமாரி என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் கடந்த பிப்ரவரி மாதம் 12ம் தேதி ஏற்பட்ட வெடி விபத்தில் சம்பவ இடத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.