சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு; பலி எண்ணிக்கை 27- ஆக உயர்வு

விருதுநகர்: சாத்தூர் அருகே நடந்த பட்டசு ஆலை வெடிவிபத்தில் படுகாயமுற்ற மேலும் ஒரு பெண் உயிரிழந்துள்ளார். மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த படந்தாலை சேர்ந்த முத்துராஜ் மனைவி வீரலட்சுமி(40) சிகிச்சைபலனின்றி உயிரிழந்தார்.  சாத்தூர் அருகே உள்ள அச்சங்குளத்தில் சந்தனமாரி என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் கடந்த பிப்ரவரி மாதம் 12ம் தேதி ஏற்பட்ட வெடி விபத்தில் சம்பவ இடத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.

பலத்த தீக்காயமடைந்து சிவகாசி, சாத்தூர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவந்தவர்கள்  அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 26 -ஆக உயர்ந்திருந்தது. மேலும் இன்று வீரலட்சுமி உயிரிழந்ததையடுத்து அச்சங்குளம் பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 27-ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: