கிண்டியில் உள்ள தொழிற்பயிற்சி மையத்தில் இதுவரை 54 பேருக்கு கொரோனா உறுதி.: ராதாகிருஷ்ணன்

சென்னை: கிண்டியில் உள்ள தொழிற்பயிற்சி மையத்தில் இதுவரை 54 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். தொழிற்பயிற்சி மையத்தில் 578 மாதிரிகளை பரிசோதனை செய்ததில் 54 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் தமிழகத்தில் கட்டுப்படுத்தப்பட்ட தெருக்களின் எண்னிக்கை 15-ல் இருந்து 525-ஆக உயர்ந்துள்ளது என் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: