தபால் வாக்கு பதிவு செய்யும் போது வீடியோ பதிவு எடுக்கப்படும்: சத்யப்பிரத சாகு தகவல்

சென்னை: தபால் வாக்கு பதிவு செய்யும் போது வீடியோ பதிவு எடுக்கப்படும் என்று சத்யப்பிரத சாகு தகவல் அளித்துள்ளார். தபால் வாக்குகளை வீடுகளுக்கு எடுத்துச் செல்லும் போது தேர்தல் அலுவலருடன் காவலர் ஒருவரும் செல்வார் என கூறினார். 44,759 வாக்குச்சாவடிகளில் வீடியோ கேமரா பொருத்தப்பட்டு வாக்குப்பதிவு நடைபெறுவது கண்காணிக்கப்படும்.

வருமான வரித்துறையினர் அவர்களுக்கு கிடைக்கும் தகவல் அடிப்படியில் சோதனை நடத்தி வருகின்றனர். வருமானவரித்துறை சோதனைக்கும் தேர்தலுக்கு தொடர்புள்ளதா என்பது விசாரணைக்கு பிறகு தெரியவரும் என கூறினார். தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 88,937 வாக்குச்சாவடிகளில் 10,528 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று சாகு தகவல் அளித்துள்ளார்.

தமிழகத்தில் 300 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை என்று தலைமை தேர்தல் அதிகாரி சாகு பேட்டியளித்துள்ளார். 234 தொகுதிகளிலும் மொத்தம் 3,998 வேட்பாளர்கள் போட்டியிடுவதாகவும் சத்யப்பிரத சாகு அறிவித்துள்ளார். மொத்த வேட்பாளர்களில் 3,585 பேர் ஆண்கள், 411 பேர் பெண் வேட்பாளர்கள், மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த 2 பேரும் போட்டியிடுகின்றனர்.

Related Stories: