கண்ணமங்கலம்: கண்ணமங்கலம் அடுத்த கொளத்தூர் கிராமத்தில் உள்ள பழமையான திரவுபதியம்மன் கோயில் புனரமைக்கப்பட்டது. தொடர்ந்து கோயில் கும்பாபிஷேகம் இன்று நடந்தது. இதையொட்டி அதிகாலை 4 மணி முதல் திருப்பள்ளி எழுச்சி, கோ பூஜை, யாக சாலை பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் காலை 7 மணி முதல் யாகசாலையில் இருந்து கோபுர கலசங்கள் புறப்பட்டு, கோபுர கலசம், கொடிமரம், தர்மர், பீமன், அர்ஜீனன், நகுலன், சகாதேவன் ஆகிய சுவாமிகள் மீது புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.