சென்னை: உலக காசநோய் தினத்தையோட்டி ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நேற்று கலந்து கொண்டார் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன். பின்னர், அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது: காசநோயை 2025க்குள் ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் காசநோய் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. கொரோனாவின் தாக்கம் இருப்பதால், அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும், கூட்டமான நிகழ்ச்சிகள் மட்டுமல்லாமல், தள்ளுவண்டி கடைகளில் சாப்பிடும்போதும் இடைவெளி பின்பற்றி மாஸ்க் அணிய வேண்டும்.