சென்னை: சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்காக தமிழகத்துக்கு கூடுதலாக 235 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் வருகிறார்கள் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறினார். தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி தமிழகத்துக்கு தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 330 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதி இருந்தார்.