மக்களுக்கு செய்த திட்டங்களை முன்னிலை படுத்த தயாரா?... ஓபிஎஸ்-க்கு திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் சவால்

தேனி: ஓட்டுக்கு பணம் தராமல் மக்களுக்கு செய்த திட்டங்களை முன்னிலை படுத்தி வெற்றி பெற தயாரா என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் சவால் விடுத்துள்ளார். போடி தொகுதியில் அதிமுக சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து திமுக சார்பில் தங்க தமிழ்செல்வன் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் தேனி ஒன்றியத்தில் வாக்கு சேகரித்த தங்க தமிழ்செல்வன் ஓட்டுக்கு பணம் தராமல் மக்களுக்கு செய்த திட்டங்களை முன்னிலை படுத்தி துணை முதல்வர் வெற்றி பெற தயாரா என சவால் விடுத்துள்ளார். இதனிடையே தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் துணை தலைவராக இருந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவை தங்கம், சில தினங்களுக்கு முன்பு அந்த கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த கோவை தங்கம், திமுக கூட்டணியை ஆதரித்தும், அமைச்சர் வேலுமணியின் ஊழலை எடுத்து கூறியும் பரப்புரை மேற்கொள்ள உள்ளதாக கூறியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதால் தான் சுயேச்சையாக போட்டியிடவில்லை. மேலும் வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக 200 தொகுதிகளில் வெற்றி பெரும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: