சென்னை : மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் 2வது இடத்தில் இருந்த தமிழக காவல்துறை 5வது இடத்திற்கு சரிந்துள்ளது.மக்களின் புகார்களை விசாரித்து தீர்வு காண்பதில் 2019ம் ஆண்டில் தமிழக காவல்துறை 2ம் இடத்தில் இருந்தது. மாநில வாரியாக காவல்துறையின் திறன், செயல்பாடு குறித்து டாடா அறக்கட்டளை ஆய்வு மேற்கொண்டது. ஆய்வு தொடர்பான அறிக்கையையும் டாடா அறக்கட்டளை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2020ல் மக்கள் புகார்களுக்கு தீர்வு கண்டதில் இந்திய அளவில் கர்நாடக காவல்துறை முதலிடம் பிடித்துள்ளது. இதைத் தொடர்ந்து சட்டீஸ்கர் காவல்துறை 2ம் இடத்திலும் ஒடிசா, ஆந்திர பிரதேச காவல்துறை 3, 4 இடங்களையும் பிடித்துள்ளது. காவல்துறையின் திறனை மதிப்பிடும் 10 புள்ளிகளில் 5.7 பெற்று கர்நாடகா முதல் இடத்திலும் தமிழக போலீஸ் 5.4 புள்ளிகளுடன் 5ம் இடத்திலும் உள்ளது.