மன்னார்குடி: திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நன்னிலம் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் அமமுக வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிரசாரம் செய்வதாக இருந்தது. இதற்காக மன்னார்குடி பெரியார் சிலை அருகே நேற்றுமுன்தினம் இரவு தேர்தல் பிரசார கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், டிடிவி தினகரன் மன்னார்குடி வரும்போது இரவு 10.15 மணியாகிவிட்டது. இதனால் சைகை மூலம் பிரசாரம் செய்த அவர், தேர்தல் அலுவலகத்தில் 4 தொகுதி வேட்பாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். பின்னர் கும்பகோணம் புறப்பட்டு சென்றார்.