சென்னை: கிண்டி கோல்ப் மைதானத்தில் கிளப் ஹவுஸ் கட்டுவதற்கான திட்ட அனுமதிக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. கிண்டியில் உள்ள கோல்ப் மைதானத்தை தமிழ்நாடு கோல்ப் கூட்டமைப்பும், காஸ்மோபாலிட்டன் கிளப்பும் இணைந்து நிர்வகித்து வருகிறது. இந்த நிலத்தை கோல்ப் கூட்டமைப்புக்கும், காஸ்மோபாலிட்டன் கிளப்புக்கும் சேர்த்து தமிழக அரசு குத்தகைக்கு வழங்கியிருந்தது. இந்நிலையில், கடந்த 2018ம் ஆண்டு தமிழ்நாடு கோல்ப் கூட்டமைப்பு, கோல்ப் மைதானத்தில் கிளப் ஹவுஸ் கட்டுவதற்கான அடிக்கல்லை நாட்டியது. இதற்கு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் அனுமதியளித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து காஸ்மோபாலிட்டன் கிளப் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.