திருப்போரூர்.: திருப்போரூர் சட்டமன்ற தொகுதியில் மனு தாக்கல் செய்வதற்கான இறுதி நாள் நேற்று முன்தினம் முடிவடைந்தது. நேற்று மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன. தேர்தல் செலவினப் பார்வையாளர் பியூஷ் கத்தியார், திருப்போரூர் தொகுதி தேர்தல் அலுவலர் சுப்ரமணியன் ஆகியோர் முன்னிலையில் அனைத்து வேட்பாளர்களும் வரவழைக்கப்பட்டனர். 19 பேர் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் முக்கிய வேட்பாளர்களான விடுதலை சிறுத்தைகள், பா.ம.க., அ.ம.மு.க., நாம் தமிழர், மக்கள் நீதி மையம் ஆகிய கட்சி வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக தேர்தல் அலுவலர் சுப்ரமணியன் அறிவித்தார்.