செங்கல்பட்டு: சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, நேற்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான பயிற்சி வகுப்பு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவரான .அ.ஜான் லூயிஸ் தலைமையில் நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டத்தில் சோழிங்கநல்லூர், பல்லாவரம், தாம்பரம்,. செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர் (தனி), மதுராந்தகம் (தனி) ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளது இந்திய தேர்தல் ஆணையத்தால் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான கால அட்டவணை அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. ஒவ்வொரு வாக்குசாவடி மையத்திலும் பயன்படுத்த வேண்டிய மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள்,