நெல்லை: நெல்லை மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு 3 கட்ட பயிற்சி வகுப்புகள் நடக்கிறது. கடந்த 18ம் தேதி முதற்கட்ட பயிற்சி வகுப்பு நடந்தது. இது தொடர்பான தகவல், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஆசிரியர்களுக்கு சென்றடையவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று (21ம் தேதி) 2வது கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பு நடக்கிறது. இதில் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்க அழைப்பாணை அனுப்பப்பட்டு உள்ளதுடன், முதற்கட்ட பயிற்சியில் கலந்து கொள்ளாத ஆசிரியர்கள், அதற்கான விளக்கத்தை அளிக்குமாறும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.