துரைப்பாக்கம்: திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் பங்குனி திருவிழா, ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக நடைபெறும். கடந்தாண்டு மார்ச் மாதம் தொடங்கிய கொரோனா தொற்று பரவல் காரணமாக, இந்த திருவிழா ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த ஆண்டு பங்குனி திருவிழா நேற்று முன்தினம் இரவு கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக துவங்கியது. இந்த ஆலயத்தின் மேற்கு கோபுரம் அருகே உள்ள கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றப்பட்டது. இதையடுத்து, பஞ்சமூர்த்திகளின் வீதியுலா நடந்தது.