மக்களின் தேவை பூர்த்தி செய்யப்படும்: திமுக வேட்பாளர் பிரபாகர் ராஜா பேச்சு

சென்னை: விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா, தொகுதிக்கு உட்பட்ட கலைஞர் நகர் 131வது வட்டம் 137வது வட்டம் 1வது செக்டர், 2வது செக்டர், 3வது செக்டர், 4வது செக்டர், 5வது செக்டர்,  6வது செக்டர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று 7 மணி நேரத்திற்கு மேலாக நடந்தே சென்று வீடு வீடாக வாக்கு சேகரித்தார். அப்போது பொதுமக்கள் கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்று நிறைய பேர் பிரபாகர் ராஜாவிடம் மனுக்கள் கொடுத்தனர். பூங்காங்கள் பராமரிக்கப்படாமல் உள்ளது அதனை பராமரித்து கொடுங்கள் என்று முதியவர்கள் பலர் வலியுறுத்தினர்.

மாணவர்கள் நவீன நூலகம் வேண்டும் என்று வேட்பாளரிடம் வலியுறுத்தினர். பொதுமக்கள் குறைகளை கவனமுடன் கேட்ட பிரபாகர் ராஜா திமுக ஆட்சி அமைந்தவுடன் நிச்சயமாக செய்து தரப்படும் என்று வாக்குறுதி அளித்தார். மக்கள் நலனே எனது குறிக்கோளாக இருக்கும். மக்களின் தேவை உடனுக்குடன் திமுக ஆட்சியில் நிவர்த்தி செய்யப்படும் என்றும் உறுதியளித்தார். வட்ட செயலாளர் இரா.செழியன், பகுதி செயலாளர் கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் துரைராஜ், பி.எஸ்.முருகேசன், உமாபதி,  ராமமூர்த்தி, சீரடி கண்ணன், நந்த கோபால், ரவிக்குமார் சாமிகண்ணு, ஆனந்த், சுந்தர், கார்த்திக், பழனி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Related Stories: