பொன்னேரி: மீஞ்சூர் அடுத்த காட்டூர் பகுதியில் திருட்டு வழிப்பறி கொள்ளை, கொலை குற்ற செயல்களை தடுக்க சிசிடிவி கேமரா பொருத்தப்பட வேண்டும் என காட்டுப்பள்ளியில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு காவல்துறை கோரிக்கை வைத்தனர். இதனை, ஏற்று அந்நிறுவனம் சிசிடிவி கேமராக்களை நேற்று முன்தினம் வழங்கியது. அதனை முக்கிய சாலைகளில் பொறுத்தப்பட்டது. இதற்கான துவக்க விழா நேற்று காட்டூர் காவல் நிலையத்தில் நடைபெற்றது.