சென்னை: சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் பள்ளியில் 1 முதல் 8ம் வகுப்பு வரை மூடப்படும் என நிர்வாகம் அறிவித்துள்ளதால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா தொற்று பாதிப்பால் தமிழகத்தில் உள்ள அநேக பள்ளிகள் தொடர்ந்து மூடப்படும் அவலம் நீடித்து வருகிறது. கடந்த 1 வருடமாக பள்ளிகள் திறக்காததால் வருமானம் இல்லாமல் அந்த நிர்வாகங்கள் கடும் பொருளாதார பாதிப்பை சந்தித்துள்ளன. இந்நிலையில் சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 1 முதல் 8ம் வகுப்பு வரை வகுப்புகள் மூடப்படும் என்றும் மாணவர்கள் மாற்று சான்றிதழ் பெற்றுக்கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் தனியார் பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.