அரசு வழக்கறிஞர் மரணம் ஓபிஎஸ், இபிஎஸ் இரங்கல்

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தின் சிறப்பு அரசு வழக்கறிஞருமான ஏ.என்.தம்பிதுரை மரணத்திற்கு ஓபிஎஸ், இபிஎஸ் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வெளியிட்ட இரங்கல் அறிக்கை: தென்சென்னை மாவட்ட வழக்கறிஞர் பிரிவு முன்னாள் துணைத் தலைவரும், சென்னை உயர் நீதிமன்றத்தின் சிறப்பு அரசு வழக்கறிஞருமான ஏ.என்.தம்பிதுரை உடல்நலக்குறைவால் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றோம். அன்பு சகோதரர் தம்பிதுரையை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு, இந்த துயரத்தை தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியையும், தைரியத்தையும் அளிக்க வேண்டும் என்றும், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெறவும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: