சென்னை: பாலியல் குற்றச்சாட்டிற்கு ஆளான சிறப்பு டிஜிபியை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: பாலியல் புகாருக்குள்ளான சிறப்பு டிஜிபியை கட்டாயம் பணியிடை நீக்கம் செய்ய வேண்டுமென்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும். அப்படி செயல்படுத்தத் தவறினால் பாலியல் குற்றச்சாட்டிற்கு ஆளான குற்றவாளிக்கு துணைபோகிற குற்றத்தை தமிழக அரசே செய்ததாக கருத வேண்டிய நிலை ஏற்படும்.