காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாக்காளர் அட்டை சிறப்பு முகாம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையத்தால் வாக்காளர்கள் மின்னணு வாக்காளர் அடையாள அட்டை பெறுவதற்கு 2 நாட்கள் சிறப்பு முகாம், அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நேற்று முன்தினம் தொடங்கியது. முகாமில் ஏற்கனவே புதியதாக வாக்காளர் பட்டியலில் முதன்முறையாக பெயர் சேர்க்கப்பட்ட வாக்காளர்களில், தங்களது செல்போன் எண்ணை வழங்கியவர்களுக்கு, மின்னணு வாக்காளர் அடையாள அட்டை செல்போன், கணினி மூலம் பதிவிறக்கம் செய்து கொடுக்கப்பட்டது. மின்னணு வாக்காளர் அடையாள அட்டை பெற முகாம் நேற்றும் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நடந்தது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்த முகாமினை கலெக்டரும், தேர்தல் அலுவலருமான மகேஸ்வரி ரவிக்குமார், ஆர்டிஓ ராஜலட்சுமி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Related Stories: