சென்னை: அதிமுகவுடன் தொகுதி பங்கீட்டில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக தேமுதிக அக்கூட்டணியில் இருந்து விலகியது. பின்னர், அமமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தையில், இறுதியாக 50 இடங்கள் ஒதுக்குவதாக முடிவு செய்யப்பட்டது. ஆனால், முதல்வர் வேட்பாளராக விஜயகாந்த்தை முன்னிறுத்த வேண்டும் என தேமுதிக தெரிவித்தது. இதை டிடிவி.தினகரன் ஏற்றுக்கொள்ளாததால் இரு கட்சிக்கும் கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வந்தது. இந்தநிலையில், டிடிவி.தினகரன் அமமுக சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ள 195 வேட்பாளர்களின் பட்டியலை நேற்று முன்தினம் வெளியிட்டார். கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியது போக தற்போது அமமுகவிடம் 23 சீட்கள் மட்டுமே உள்ளது. இதனால், அமமுக-தேமுதிக இடையிலான கூட்டணி பேச்சுவார்த்தை முடிவு பெற்றதாக கூறப்பட்டது.