சிவன் கோயில்களில் சிவராத்திரி விழா

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே உள்ள சுருட்டபள்ளி கிராமத்தில் சிவராத்திரி விழா கடந்த வாரம் தொடங்கி நேற்று முன்தினம் முடிந்தது. இதில், தினமும் விநாயகர், முருகன், சிவன், பார்வதி சமேத தட்சிணாமூர்த்தி ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. மேலும், உற்சவரான சிவன், பார்வதியை தினமும் பல்லக்கு வாகனம், சந்திரபிரபை வாகனம், காமதேனு வாகனம், பூத வாகனம், கஜ வாகனம், ரிஷப வாகனம் என பல்வேறு வாகனங்களில் வீதியுலாவாக கொண்டு வந்தனர். இந்த விழாவிற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல், காரணி கிராமத்தில் காரணீஸ்வரர் கோயிலிலும், வடதில்லை கிராமத்தில் மரகதாம்பிகா சமேத பாபஹரேஸ்வரர் கோயிலிலும், பூண்டி கிராமத்தில் ஊன்றீஸ்வரர் கோயிலிலும், மெய்யூர் கிராமத்தில் மெய்கண்டேஸ்வரர் கோயிலிலும் சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது.

Related Stories: