கொடைக்கானல் : தமிழக அரசின் கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பொதுமக்கள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய 6 பவுன் வரை நகைக்கடன், விவசாய கடன் ஆகியவற்றை தள்ளுபடி செய்வதாக அறிவித்திருந்தார். இதையடுத்து நகை, விவசாய கடன் தள்ளுபடி செய்தது குறித்து பொதுமக்கள், விவசாயிகள் வங்கிகளுக்கு சென்று கேட்டனர். அப்போது அரசாணை வங்கிகளுக்கு வந்தால் மட்டுமே நகை, விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என வங்கிகள் சார்பில் தெரிவிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.