மதுரை: தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் பழனியில் பாஜக-வினர் வீடு வீடாக சென்று பரிசுப்பொருட்கள் விநியோகம் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாஜக-வின் பழனி நகர துணைத்தலைவர், சித்ராமணி என்பவர் தேவாங்கூர் தெருவில் வீடு வீடாக சென்று பரிசுப்பொருட்கள் விநியோகம் செய்துள்ளார். இதுகுறித்து புகைப்பட ஆதாரங்களுடன் தேர்தல் அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் திமுக-வினர் புகார் அளித்தனர். ஆனால் அவர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அதிகாரிகள் அலட்சியமாக நடந்துகொள்வதாக திமுக-வினர் குற்றம்சாட்டியுள்ளனர். தொகுதி பங்கீடு இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில், பழனியில் பாஜக-வினர் பரிசுப்பொருட்கள் விநியோகம் செய்திருப்பது அதிமுகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.