பட்டிவீரன்பட்டி: பட்டிவீரன்பட்டி அருகே பள்ளி மாணவர்கள் பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான பயணம் செல்கின்றனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள சித்தரேவு, நெல்லூர், கதிர்நாயக்கன்பட்டி, கணேசபுரம், அய்யம்பாளையம் போன்ற பகுதிகளை சேர்ந்த பள்ளி மாணவர்கள் பட்டிவீரன்பட்டி, வத்தலக்குண்டு போன்ற ஊர்களில் உள்ள பள்ளிகளில் படித்து வருகின்றனர். தற்போது அரசு உத்தரவின்படி 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடந்து வருகின்றன.