பஸ் படிக்கட்டில் மாணவர்கள் ஆபத்தான பயணம்: அதிகாரிகள் கவனிப்பார்களா?

பட்டிவீரன்பட்டி: பட்டிவீரன்பட்டி அருகே பள்ளி மாணவர்கள் பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான பயணம் செல்கின்றனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள சித்தரேவு, நெல்லூர், கதிர்நாயக்கன்பட்டி, கணேசபுரம், அய்யம்பாளையம் போன்ற பகுதிகளை சேர்ந்த பள்ளி மாணவர்கள் பட்டிவீரன்பட்டி, வத்தலக்குண்டு போன்ற ஊர்களில் உள்ள பள்ளிகளில் படித்து வருகின்றனர். தற்போது அரசு உத்தரவின்படி 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் பட்டிவீரன்பட்டி, வத்தலக்குண்டு போன்ற ஊர்களில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் காலையில் பள்ளிக்குச் செல்லும் போதும், பள்ளி முடிந்து மாலையில் வீடு திரும்பும் போதும் பஸ்களின் படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் ெசய்து வருகின்றனர். மாணவர்களின் இந்த செயலை கண்டக்டரோ, டிரைவரோ கண்டும், காணாமல் உள்ளனர். இதனால் உயிர்ப்பலி ஏற்படும் அபாயம் உள்ளது. ஏதேனும் விபரீதம் நிகழும் முன்பு, சம்பந்தபட்ட அதிகாரிகள் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: