தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 66,337 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது: சுகாதாரத்துறை தகவல்

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 66,337 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசி திட்டத்தின் 42-வது நாளான இன்று, தமிழகத்தில் கோவிஷீல்டு தடுப்பூசி 64,794 பேருக்கும், கோவாக்ஸின் தடுப்பூசி 1543 பேருக்கும் போட்டுக்கொண்டனர். இதுவரை மொத்தமாக 5,89,370 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: