சென்னை: அரசு இடங்களில் தேர்தல் அலுவலகம் அமைக்க அனுமதி இல்லை என மாவட்ட தேர்தல் அலுவலர் உத்தரவிட்டுள்ளார். மேலும் தனியார் இடங்களில் உரிய அனுமதி பெற்று தான் வைக்க வேண்டும் என கூறியுள்ளார். முதியவர்கள், மாற்று திறனாளிகள் தபால் வாக்கு பதிவு செய்ய மார்ச் 16-ம் தேதிக்குள் படிவம் 12D அளிக்க வேண்டும் என தெரிவித்தார். பொதுக் கூட்டங்களில் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என அறிவுறுத்தல் செய்துள்ளார்.