டெல்லி: ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் தொழிலதிபர் முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். இதற்கு முன்னர், முதலிடத்தில் இருந்த ஜாங் ஷான்ஷனின் பாட்டில் வாட்டர் நிறுவனம் இந்த வாரம் 20 சதவீதம் இழப்பை சந்தித்ததால் அவரது சொத்து மதிப்பு குறைந்தது. முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ இயங்குதளங்களில் முகநூலின் 5.7 பில்லியனை முதலீடு செய்து அவரை மீண்டும் ஆசியாவின் பணக்காரராக ஆக்கியுள்ளது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட சமூகவலைதள நிறுவனமான முகநூல் கடந்த 2014-ஆம் ஆண்டு முகநூலை கைப்பற்றிய பின்னர், தனது உலகளாவிய சந்தையை விரிவுப்படுத்த 5 புள்ளி 7 பில்லியனை முதலீடு செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 10 சதவீத பங்குகளை வாங்கியுள்ளது. இது 2014 முதல் சமூக ஊடக நிறுவனங்களின் மிகப்பெரிய ஒப்பந்தமாகும். ஒரே குடையின் கீழ் டிஜிட்டல் செயலி மற்றும் வயர்லெஸ் சேவை இரு நிறுவனங்களும் இணைந்து வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளன. அமெரிக்காவில் ஒவ்வொரு நாளும் வர்த்தக முடிந்தபின் தரவரிசை அதிகாரப்பூர்வமாக புதுப்பிக்கப்படுகிறது. உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு உரிமையாளரான அம்பானியின் செல்வம் செவ்வாயன்று ப்ளூம்பெர்க் தரவரிசையில் 14 பில்லியன் டாலர் குறைந்தது, இது ஆசியாவில் உள்ள எவருக்கும் டாலர் அடிப்படையில் மிகப்பெரிய சரிவு என கூறப்படுகிறது.