சென்னை: தமிழக நெடுஞ்சாலைத்துறை இணை தலைமை பொறியாளர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், லஞ்ச பெற்றதற்கான 6 டைரிகள், நகை ரசிதுகள், வங்கி கணக்குகளை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தமிழக நெடுஞ்சாலைத்துறை இணை தலைமை பொறியாளராக கார்த்திகேயினி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் நெடுஞ்சாலை துறையில் ஒப்பந்தம் விடுவதில் பல கோடி ரூபாய் ஒப்பந்தம் எடுக்கும் தனியார் நிறுவனங்களில் இருந்து பெற்றதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தொடர் புகார்கள் வந்தது. இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இணை தலைமை பொறியாளர் கார்த்திகேயினி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.