சென்னை: போராடும் அங்கன்வாடி ஊழியர்களின் கோரிக்கைக்குச் செவிசாய்க்காமல் அவர்களைக் கைது செய்வதா? என மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். கடலூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கடலூரில் இன்று மாவட்ட ஆட்சியர் பழைய அலுவலகம் அருகே சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதாவது சத்துணவு அமைப்பாளர், சமையலர், உதவியாளர் அனைவரையும் முழு நேர அரசு ஊழியராக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட ஒன்றிய செயலாளர் எஸ்.கற்பகம் உள்பட 40 பேரை போலீசார் கைது செய்தனர்.