சென்னை : திஷாரவியின் துணிச்சலை கொண்டாடுவதே பாசிசத்திற்கு சாவு மணியடிக்கும் என்று திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார். ஸ்வீடன் நாட்டை சேர்ந்த சூழலியல் ஆர்வலர் டெல்லி விவசாயிகள் போராட்டம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த டூல்கிட் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த டூல்கிட் தொடர்பாக பெங்களூருவை சேர்ந்த சூழலியல் ஆர்வலர் திஷாரவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,உழவர் போராட்டத்தை உலகறிய செய்வது தேசத்துரோகமெனில் நான் சிறையில் இருக்கவே விரும்புகிறேன் என துணிச்சலோடு நீதிமன்றத்தில் சொல்லி இருக்கிறார் 22 வயது திஷாரவி. புரட்சிகர வாழ்த்துகள் சொல்வோம்.