அருப்புக்கோட்டையில் காட்சிப்பொருளான போலீஸ் அவுட்போஸ்ட்

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டையில் போலீஸ் பூத் காந்திநகர், எம்எஸ் கார்னர், புதிய பஸ்நிலையம், எஸ்பிகே கல்லூரிசாலை, நான்கு வழிச்சாலை இணைப்பு உட்பட பல்வேறு பகுதிகளில் போலீஸ் பூத் அமைக்கப்பட்டுள்ளன. அந்தந்த பகுதிகளில் நடக்கும் திருட்டு, சாலைவிபத்து, போதையில் ரகளை செய்பவர்கள் குறித்து பொதுமக்கள் பூத்தில் இருக்கும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தவுடன், அங்குள்ள போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றும், உடனே காவல்நிலையத்திற்கு தெரிவிக்கவும் இந்த போலீஸ் பூத் அமைக்கப்பட்டது.

ஆனால், இப்படி அருப்புக்கோட்டையில் அமைக்கப்பட்ட அனைத்து போலீஸ் பூத்களும் மூடியே கிடக்கின்றன. மேலும் இதில் சிசிடிவி கண்காணிப்பு காமிரா மூலம் அந்தப் பகுதிகளை மானிட்டரில் பார்க்க தேவையான வசதிகளும் செய்து தரப்படவில்லை. புறநகர் பகுதியில் வீடுகள் அதிகரிப்பதால் திருட்டு சம்பவங்களும் அடிக்கடி நடக்கிறது.

ஆனால், போதிய போலீசார் இருந்தும் ரோந்து பணியில் அவர்கள் ஈடுபடவில்லை. போலீஸ் பூத்களில் போலீசார் இருந்தால் குற்றங்கள் குறைய வாய்ப்பு உள்ளது. இவற்றை கருத்தில் கொண்டுபோலீஸ் பூத்களில் போலீசார் தினமும் பணியில் அமர்த்த மாவட்ட எஸ்பி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: