தென் தமிழகம், டெல்டா மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்..!!

சென்னை: தென் தமிழகம், டெல்டா மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது: வட தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், வடக்கு கேரளா அதையொட்டிய கடலோர பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கில் சுழற்சி நிலவுகிறது.

தென் தமிழகம், டெல்டா மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.மேற்குதொடர்ச்சி மலையொட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதனையடுத்து, வருகின்ற பிப்ரவரி 24ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் வறண்ட வானிலையே நிலவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் கடலூரில் 12 செ.மீ, திருத்தணி, சிவகிரியில் தலா 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: