புதுச்சேரி: புதுச்சேரி கவர்னர் மாளிகையில் வடமாநில ஊழியர்கள் 3 பேர் பணிநிரந்தரம் செய்யப்பட்டிருப்பது அரசு ஊழியர்களை கொந்தளிப்புக்கு ஆளாக்கி உள்ளது. புதுச்சேரியில் கவர்னராக பணியாற்றிய கிரண்பேடி சில தினங்களுக்கு முன் குடியரசு தலைவரால் நீக்கப்பட்டார். மரபை மீறி அவர் இன்னும் ராஜ்நிவாஸில் இருந்து வெளியேறாமல் அங்குள்ள விருந்தினர் மாளிகையிலே தங்கியுள்ளார். நாளை அவர் புதுச்சேரியிலிருந்து விடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி வருகின்றன. இதனிடையே கவர்னர் மாளிகையில் பணியாற்றும் வட மாநிலங்களைச் சேர்ந்த 3 பேர் பணிநிரந்தரம் செய்யப்பட்டிருப்பது அரசு ஊழியர்களை அதிருப்திக்குள்ளாகி உள்ளது. ஏற்கனவே கவர்னர் மாளிகையில் பணியாற்றிய அரசு, சார்பு நிறுவன ஊழியர்களை முதல்வர் குற்றச்சாட்டின்பேரில் அவர் திருப்பி அனுப்பியிருந்தார்.