சென்னை: தமிழகத்தில் அங்கீகராரம் இல்லாத 14 லட்சம் மனைகள் வரன்முறை செய்யப்படாமல் இருந்தது. இந்த மனைகளை வரன்முறை செய்ய கடந்த 2017ம் ஆண்டு தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்காக தமிழக அரசு சார்பில் பிரத்யேகமாக இணையதளம் உருவாக்கப்பட்டு அதன் மூலம் வரன்முறை செய்வதற்காக விண்ப்பபிக்கலாம் என்றும் அறிவுறுத்தியிருந்தது. அதன் பேரில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வரன்முறை செய்ய விண்ணப்பித்திருந்தனர். அவர்களின் மனைகள் வரன்முறை செய்யப்பட்டது. இந்த மனைகளை வரன்முறை செய்யும் போது அதற்காக வளர்ச்சிக் கட்டணம் தமிழக அரசு சார்பில் வசூலிக்கப்பட்டது.