ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்ததற்கான அரசாணை வெளியீடு..!!

சென்னை: ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்ததற்கான அரசாணையை  தமிழக அரசு வெளியிட்டுள்ளது. ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்பாக வழக்குகள் ரத்து செய்யப்படும் என்று முதல்வர் பேரவையில் அறிவித்திருந்தார். காவலர்களை தாக்கியது, தீ வைப்பு போன்ற ஒரு சில வழக்குகளை தவிர மற்ற வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சட்ட வல்லுநர்களின் ஆலோசனை பெற்று வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

Related Stories: